வாழ்வில் யார் ஒருவனுக்கு நட்பு சரியாக அமைந்திருக்கிறதோ அவன் வாழ்வில் உயர் நிலையை அடைகிறான்.
- ஒருவனிடம் செல்வம் மிகுந்திருந்தாலும் கல்வியறிவு மிகுந்திருந்தாலும் குசேலன் போன்ற தவசீலர்களின் நட்பு இல்லாவிட்டால், அதனால் பயனில்லை. தவசீலர்களின் நட்பைக்கொண்டவர்களுக்கு பூமியும் பொன்னும் நல்லறிவும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.
- பொறுமையுடையவன் ஒருவனுக்கு நண்பனாகக் கிடைப்பது அவனது ப்ராப்தம்.
- அனைத்தையும் அறிந்தவர்களின் நட்பு மனிதனுக்கு பிறப்பற்ற நிலையாகிய முக்தியைத் தரும். தேவர்களால் தரப்படும் வரத்தை விட உயர்ந்த பலனைத் தரும்.
No comments:
Post a Comment