- குறுகிய அனுபவம் உள்ளவர்கள் தாங்கள் பார்த்தது தான் உண்மை என்று கருதுகிறர்கள்.
- இயற்கையான சுபாவத்தை நடைமுறை வாழ்க்கையால் மாற்றுவது என்பது சிரமமாகும்.
- இந்த உலகமும் நாயின் சுருண்ட வாலைப் போன்றது தான். அதை நிமிர்த்துவதாகக் கூறி சிலர் முயன்று தோற்றுப்போகின்றனர். இதற்க்காத் தூக்கம் கேட்டு நீங்கள் அவதிப்பட வேண்டாம். நீங்கள் இல்லாமலே அது இயங்கிக்கொண்டு தான் இருக்கும்.
- போலி வாழ்கை வாழ்பவர்கள் பலர் எப்படியோ பெரும் புகழும் பெற்று விடுகிறார்கள். ஆனால் உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.
- யாருக்கும் உண்மை தெரியாது என்று தவறு செய்பவர்கள், ஒருநாள் அது பொய் என்று தெரியவந்து அகப்படுவார்கள் என்பதை யாரும் உணரவில்லை.
- விருந்தினர்களை முதலில் உபசரித்து மகிழ வேண்டும்.
- ஆளுக்கேற்ற விளக்கம் அளிப்பதே அறிவுடைமையின் அழகு.
Tuesday, January 24, 2012
விவேகானந்தர்:
இராமகிருஷ்ணபரமஹம்சர்:
உலகில் யாரைத் துன்புறுத்தினாலும் அது கடவுளையே துன்புறுத்தியதாக அமையும். அதேபோல் யாருக்கு நன்மை செய்தாலும் அது கடவுளுக்கு செய்தது போல் அமையும்.
Sunday, January 15, 2012
குருநானக்:
- இறைவன் எல்லாம் அறிந்தவர். அழிப்பவரும் அவரே அழித்ததை மீண்டும் உயிர் பெறச் செய்பவரும் அவரே.
- நாம் இறந்த பின் நம்முடைய செல்வம் நம்முடன் வராது. நாம் செய்த தான தர்மங்களே நம்மைப் பின்தொடரும்.
நபிகள் நாயகம்
- மனம் திருந்தியவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள் செய்வார்.
- மற்றவர்கள் மனம் வருந்தும்படி நடக்கக்கூடாது.
- தனக்கு உதவியவரிடம் எப்போதும் நன்றியோடு நடந்து கொள்ள வேண்டும்.
- எல்லாப் பாவங்களுக்கும் பொய்யே ஆநிவேர். பொய் சொல்லாதே. ஒருவன் பிற பாவங்களை செய்ய மாட்டான்.
- உழைப்பே உயர்வைத் தரும்.
- எல்லா உயிர்களிடத்தும் எப்போதும் அன்போடு நடக்க வேண்டும்.
- வாய்மையே வெல்லும்
- இரும்புக்கல்லுக்கு வளையாத கருங்கல் பாறை பசுமரத்து வேருக்கு வழி விடும் என்பது போல் அன்பினால் எதையும் சாதிக்க முடியும்.
- ஊருக்குத்தான் உபதேசம் என எண்ணக்கூடாது.
- உழைத்து உண்ணும் உணவே உலகில் மிகச்சிறந்த உணவு.
- உழைப்பே உயர்வைத் தரும்.
- பிறரது குறையைக் கூராமல் அவரது குறையை மட்டுமே கூற வேண்டும்.
- முழுமையான இறை நம்பிக்கை நம்மை காக்கும்.
இயேசுநாதர்:
- மகான்களின் போதனைகளை ஏற்று மனதில் பதியவைத்து கொள்பவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதையைப்போல் பயன் தருவார்கள்.
- இறைவன் யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தே கொடுப்பான்.
- பக்கத்தில் வாழ்பவன் நெருக்கமானவன் அல்ல. எவனது இதயத்தில் அன்பு உள்ளதோ அவனே நெருங்கியவன் ஆவான்.
- தவறு செய்து மனம் திருந்தியவர்களை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- இறைவனை முழு மனதோடு நம்பி அவனை வேண்டுவோர்க்கு அவனது கருணை எப்ப்போதும் கிடைக்கும்.
புத்தர் :
- உண்மையை ஆராய்ந்து அறியாமல் வீண் புரளியை நம்பி பயப்படாதே.
- அடுத்தவர்களை வஞ்சித்து வாழ்ந்தால் அந்த வஞ்சனை ஒரு நாள் நம்மையே அழித்து விடும்.
- எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது, பேராசை பட்டால் பெருநட்டமே ஏற்படும்.
- பேராசை பெருநட்டத்தையே தரும்.
- மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கலாக்காயே மேல்.
- தன்னைப்போலவே இன்பமுள்ள உயிர்களை எவன் தன சுகம் கருதி துன்புருத்துகிரானோ அவனுக்கு மறுமையில் இன்பம் கிடைப்பதில்லை.
- பொற்காசுகளை மலை போல் குவித்த்காலும் ஆசைகள் அடங்காது போகும். ஆசைகொண்டு அனுபவித்தால் அற்ப இன்பம் தரும். அதன் பின் விளைவுகள் துன்பம் தரும் என்று அறிந்தவன் முனிவன் ஆவான்.
- பாவம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை இன்பம் தருவதாகவே தோன்றும். அது பயனை கொடுக்கும் பொது தான் பாவி தன் பாவத்தை உணர்கிறான்.
- தூயவராகுங்கள், நல்லவராகுங்கள், நல்லவர்களாக இருங்கள், அனைவரையும் நேசியுங்கள்.
- இறப்பை வெல்ல முடியாது.
- அறிவுரைகளை வெறுமனே கேட்ப்பதை விட அதன் உட்பொருளை உணர்ந்துகொண்டு அதன்படி நடக்க வேண்டும்.
- மக்கள் அனைவரும் சமம். அதில் உயர்வு தாழ்வு ஏதும் இல்லை. மனிதரில் உயர்வு தாழ்வு என ஏதும் இல்லை.
Saturday, January 14, 2012
ஒரு மனிதனுக்குரிய அவன் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கடமைகள் கண்ணபிரான் வாக்கில் உலக மக்களுக்காக:
- குழந்தைகளின் தேவைகளையெல்லாம் குறைவின்றிக் கொடுத்து வருகிறாயா?
- மதிய நேரத்தில் பசித்து வந்து உணவு கேட்பவர்களை நாராயனனாகக் கருதி உணவிடுகிறாயா? (மதிய நேரத்தில் அன்ன தானம் செய்வது மிகச் சிறப்பானது)
- தினமும் பூஜை புனஸ்காரங்களை அதிகாளையிலேயே செய்து வருகிறாயா?, அதற்க்கு உனது உடல் நிலை இடம் தருகிறதா? (உடல் நிலை சரியில்லாதவர்கள் நீராடல் முதலியவற்றை செய்ய முடியாவிட்டாலும் மனதில் இறைவனை நினைக்க வேண்டும் என்பது புலப்படுகிறது)
- தினமும் மனதில் இறைவனை இருத்தி தியானம் செய்கிறாயா?
குழந்தைச்செல்வங்களைப் பற்றி கண்ணபிரான் உலகிற்கு உணர்த்துவது:
- உனக்கு எத்தனை குழந்தைகள்
- அவர்கள் அனைவரும் கற்றவர்கள் மத்தியில் தனித்துவம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டாயா?
- அவர்கள் ஊரே போற்றுமளவு தங்கள் திறனை வளர்த்துக்கொண்டுள்ளனரா?
- குணவான்களா?
Friday, January 13, 2012
ஒரு பெண்ணுக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது கண்ணபிரான் வாக்கில்
நல்ல நண்பன் என்றால் யார் என்பதன் இலக்கணம்?
வாழ்வில் யார் ஒருவனுக்கு நட்பு சரியாக அமைந்திருக்கிறதோ அவன் வாழ்வில் உயர் நிலையை அடைகிறான்.
- ஒருவனிடம் செல்வம் மிகுந்திருந்தாலும் கல்வியறிவு மிகுந்திருந்தாலும் குசேலன் போன்ற தவசீலர்களின் நட்பு இல்லாவிட்டால், அதனால் பயனில்லை. தவசீலர்களின் நட்பைக்கொண்டவர்களுக்கு பூமியும் பொன்னும் நல்லறிவும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.
- பொறுமையுடையவன் ஒருவனுக்கு நண்பனாகக் கிடைப்பது அவனது ப்ராப்தம்.
- அனைத்தையும் அறிந்தவர்களின் நட்பு மனிதனுக்கு பிறப்பற்ற நிலையாகிய முக்தியைத் தரும். தேவர்களால் தரப்படும் வரத்தை விட உயர்ந்த பலனைத் தரும்.
Subscribe to:
Posts (Atom)